உங்கள் படைப்புகளை அனுப்ப இங்கே சொடுக்கவும்

Tuesday, 27 June 2017

நிலா அழகு பெண்


என் ரசனை அதிகமாகும் போதெல்லாம் உன் அழகு கூடிக்கொண்டே செல்கிறது 
.
உன் அன்பு கூடும் போதெல்லாம் நான் அழகாகிறேன்..
நான் அடுத்து பிறவிக்கு ஆசைப்பட்டதே இல்லை. .
உன் முகத்தை கண்ட மறுகணமே மீண்டும் ஒரு பிறவிக்கு தவம் இருக்கிறேன் ...
உன் மெல்லிதழ்களில் வழிந்தோடும் சிரிப்பினை காண என் கண்கள் தவம் இருக்கிறது. .
பூவுலகில் உனை பார்த்த மறுகணமே முடிவெடுத்து விட்டேன் ..இனி வாழ்ந்தால் இந்த பூவுக்காக மட்டுமே ..
என் முகம் பார்த்த வீட்டுக் கண்ணாடியை வெறுத்தேன் ..
உன் கண்களில் என்னைக் கண்ட பிறகு ...
எல்லாரும் என் கவிதைக்குள் கருத்தை தேடுகிறார்கள். நான் மட்டும் உன்னைத் தேடுகிறேன் ...
என்னை கவிஞாக்கியது நீயில்லை .. உன் நிலவொளி போன்ற பால் முகம் ....


No comments:

Post a Comment

Thanks for visiting our site

Widgets

அதிகம் படித்தவை

பார்வையாளர்கள்

110202