உன் கண்களின் திமிர் என் வரிகளில் தெரிகிறது. .
திமிர் பிடித்த கண்களும் அவளுக்கே...! அதை ரசித்து நான் எழுதும் வரிகளும் அவளுக்கே ....
நீ பார்த்து செல்லும் ஒற்றை வினாடி
பார்வையின் கூர்மை பிடிக்கும்...!
உன் மௌனம் சிந்தும் வார்த்தைகள் பிடிக்கும்...!
உன் கண்களில் தெறிக்கும் அந்த திமிர் பிடிக்கும்...!அத்தனை திமிரும் மொத்தமாய் உன்னிடம்...!
கண்கள் காணும் திசையெல்லாம் உந்தன் முகம் ....
அழகான கனவுகளை கண்களில் அள்ளி வருகிறாய்
... உன் கண்களில் தொலைகிறேன் நான்.....
வெண்ணிலாவின் முகம் .. மை தீட்டிய கண்கள். . கூரிய பார்வை ..... கருநிற கூந்தல். .. வானவில் பேன்ற புருவம் .
தாமரை இதழ் போன்ற உதடுகள். ....
எத்தனை அழகு
இத்தனை அழகும் கொண்ட
இன்னிலப் பெண்ணே
உன் பூ முகம் காணாமல்
என்னால் ஒரு நிமிடம் கூட
ஜீவிக்க முடியவே முடியாது
No comments:
Post a Comment
Thanks for visiting our site